பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் வேண்டுகோள்

MK Stalin OPS Request
By Thahir Sep 20, 2021 08:42 AM GMT
Report

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் வேண்டுகோள் | Mk Stalin Ops Request

7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் வேண்டுகோள் | Mk Stalin Ops Request

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர், திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.