தமிழக முதலமைச்சர் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு இன்று(திங்கள்கிழமை) காலை தென்காசியை சேர்ந்த வெற்றி வேல் என்பர் திடீரென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்ட முதல்வர் பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயோட்சையாக போட்டியிட உள்ள நிலையில் அவரை போட்டியிடக்கூடாது என அரசியல் கட்சியினர் மிரட்டுவதால் அது குறித்து முதலமைச்சரை சந்தித்து புகார் கொடுக்க வந்ததும் தெரியவந்துள்ளது.