மக்களாட்சியின் கருப்பு நாள் நேற்று - டெல்லி மசோதாவிற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
நாடாளுமன்றத்தில் delhi service bill நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி மசோதா
டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான புதிய மசோதவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதில் டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரத்தை பறிப்பதாகும் என பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.
முக ஸ்டாலின் கண்டனம்
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தப்போதும் இந்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இம்மசோதா நிறைவேறிய நேற்றைய நாள் மக்களாட்சியின் கருப்பு நாள் என பதிவிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற மத்திய பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? என குறிப்பிட்டு, 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!
— M.K.Stalin (@mkstalin) August 8, 2023
எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற @BJP4India-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?
29…