‘‘அவர முதல்ல வரச் சொல்லுங்க’’காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mkstalin guard congratulated
By Irumporai May 14, 2021 11:12 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம் .

இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செட்ய்யும் நோக்கில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தனியார் தொழில் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் தங்கதுரை தனது ஒரு மாத சம்பளம் ரூபாய் 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் பணியாற்றி வரும் தங்கதுரைக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. சென்னையில் தங்கி பணியாற்றி வரும் அவர், முதல்வரை சந்தித்து தனது சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார்.

ஆனால், முதல்வரை சந்திக்க முடியாத சூழல் தற்போது உள்ளதால் அரசு வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார்.

இந்த தகவல் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தெரியவரவே காவலாளி தங்கதுரையை நேரில் அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் வைத்திருந்த புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்