கச்சத்தீவை மீட்பதே தீர்வு - அழுத்தமாக சொன்ன மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK Ramanathapuram
By Karthick Aug 18, 2023 07:01 AM GMT
Report

ராமநாதபுர மாவட்டத்தில் மீனவர் நல மாநாட்டில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் மீனவர்கள் பிரச்சனையில் தீர்வு என்றால் அது கச்சத்தீவை மீட்பது தான் என கூறினார்.

மீனவர் நல மாநாடு 

மண்டபம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 9615 பேருக்கு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தமிழகத்தை உலகத்துடன் இணைத்து கடல் என தெரிவித்து, மீன்பிடி தொழிலில் இந்தியாவில் 5-வது மிக பெரிய மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம் கூறினார்.

[T6WP3B

தமிழகத்தில் மீன்வள துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், மீனவ கிராமங்களில் மண்ணரிப்பை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், மண்ணெணெய் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.  

5035 பேருக்கு வீடுங்களுக்கான பட்டா 

தமிழகத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்ட அவர், 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.62.19 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிததார். இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பாக மீனவர்களுக்காக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5035 பேருக்கு வீடுங்களுக்கான பட்டா வழங்கப்படும் என்றும் 45000 பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

mk-stalin-about-katchatheevu

தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீன்வர்களுக்கான மண்ணெண்ணெய் 3400 லிட்டரில் இருந்து 3700 லிட்டராக அதிகரிக்கப்படுகிறது என கூறிய முதல்வர், மீன்பிடி தடைகால நிவாரண தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்து புதிய திட்டங்களின் காரணமாக 2.77 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் என கூறினார்.

பாஜக ஆட்சியில் தான் அடக்குமுறை அதிகம் 

பாஜக ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது என குற்றம்சாட்டிய அவர், மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

mk-stalin-about-katchatheevu

இந்த சம்பவங்களால் ஒவ்வொரு முறையும் தான் கடிதம் எழுதிய பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்கள் மீது 48 தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் கடந்த 9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து எந்த தீர்மானனும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய முக ஸ்டாலின், 1974-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது என்றும் அது சட்டமில்லை என்று தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்பதே தீர்வு 

கச்சத்தீவை தாரை வார்த்ததை எல்லா நிலையிலும் கருணாநிதி எதிர்த்தார் என தெரிவித்து, கச்சத்தீவு உலக வரைபடத்தின் எந்த காலகட்டத்திலும் இலங்கையின் பகுதியாக இருந்து இல்லை என்றும் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என கூறினார்.

mk-stalin-about-katchatheevu

1974-ஆம் ஆண்டு ஜூன் 29-இல் தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானம் கருணாநிதி நிறைவேற்றிய போது, அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என குற்றம்சாட்டினார். மேலும், இந்த மீனவர் பிரச்சனையில் கச்சத்தீவை மீட்பதே தீர்வு என அழுத்தமாக தெரிவித்தார்.