காணாமல் போன தங்க வளையல்; குற்றவாளி ஒரு காகமா..? - கேரளாவில் விநோதம்!
காகம் ஒன்று தங்க வளையலை தூக்கிச் சென்று கூட்டுக்குள் வைத்திருந்த விநோத சம்பவம் நடந்துள்ளது.
தங்க வளையல்
கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதி நசீர்-ஷரீபா. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் பாத்திமா ஹைபா என்ற மகள் உள்ளார்.
இவர்கள் மூவரும் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது மகள் பாத்திமா தங்க நகைகள் அணிந்திருந்தார்.
திருமண நிகழ்ச்சியின் பொது பாத்திமா தனது வளையலை கழற்றி காகிதத்தில் சுற்றி ஒரு பையின் மீது வைத்துள்ளார். இதனையடுத்து அந்த தங்க வளையல் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் எல்லா இடத்திலும் தேடியுள்ளனர்.
காகம்
ஆனாலும் அந்த வளையல் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர்களின் உறவினர் சுலைகா என்பவர், காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கிச் சென்றதை பார்த்தனர்.
ஆகவே தங்க வளையலையும் காகம் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காகம் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்துள்ளனர்.
அப்போது சிறுமியின் தங்க வளையல் காக்கை கூடுக்குள் இருந்துள்ளது. தங்க வளையல் கிடைத்ததால் சிறுமியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.