கொரோனாவுக்கு பின் குழந்தைகளை தாக்கும் MIS-C அழற்சி நோய்? மருத்துவர்கள் எச்சரிக்கை..!
new bacteria attack
babies affect
docotors warn
By Anupriyamkumaresan
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பின் வரும் நாட்களில் MIS-C எனப்படும் அழற்சி நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர், கொரோனா தொற்றிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் இன்ஃபளமேட்டரி சிண்ட்ரோம் எனப்படும் அழற்சி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் இந்த வகை நோயால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வகை நோய்களால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கூட இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
