பெட்ரோல் விலையைக் குறைக்கும் முயற்சியில் நிதி அமைச்சகம்
பெட்ரோல் விலையைக் குறைக்கும் வகையில் நிதி அமைச்சகம் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. கிடுகிடுவென உயரும் பெட்ரோல் -டீசல் விலைக்கு கடிவாளம் போட நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு ஆனதாலும், மத்திய-மாநில அரசுகள் பல்வகை வரிகளை சுமத்துவதாலும்,பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் விலை உயர்வை குறைக்கும் திட்டத்துடன், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைப்பது பற்றி நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சில மாநில அரசுகள், பெட்ரோலியம் அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் நிதி அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு! IBC Tamil