தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வா? அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

By Karthikraja Jun 29, 2025 08:13 AM GMT
Report

மின்கட்டணம் உயர்வு தொடர்பான தகவலுக்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

மின்கட்டண உயர்வா?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வா? அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் | Minister Sivasankar Denies Electricity Tariff Rise

இதற்கான மின்சார கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. 

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம் - தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்த பல்கலைக்கழகம்

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம் - தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்த பல்கலைக்கழகம்

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்தது.

அமைச்சர் விளக்கம்

இதன்படி வரும் ஜூலை 1 முதல், மின்கட்டணம் 3.16 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதாவது யூனிட்டிற்கு, 15 காசு முதல் 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. 

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வா? அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் | Minister Sivasankar Denies Electricity Tariff Rise

இந்த தகவலுக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அவர், "வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது. 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடரும்" என தெரிவித்துள்ளார்.