சிறையில் செந்தில் பாலாஜி; சிக்கன் முதல் கட்டில் வரை - முதல் வகுப்பில் இவ்வளவு சிறப்புகளா!
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும்.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உடனடியாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படுகிறது.
அமைச்சர் மற்றும் எம்எல்ஏ என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சையும் வழங்கப்படும். இங்கு ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தான் ஏ கிளாஸ் கைதிகளுக்கு கிடைக்கும். கட்டில், தலையணை, கூடுதல் லைட், படிப்பதற்குப் பத்திரிகை, மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு ஆகியவை கிடைக்கும்.
முதல் வகுப்பு
மற்ற சிறைவாசிகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் வசதியும், பிரைவேசியும் இருக்கும். பொதுவாக சிறையில் யார் இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் வாரம் இரண்டு நாட்கள் போய் பார்க்கும் போது பழங்கள் மற்றும் சிறுதீனிக்களை வழங்க முடியும். மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவற்றை மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும்.
உணவை முதல் வகுப்பு கைதிகள் விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் கேண்டீனில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிடலாம்.
தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளையே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.