சும்மா உருட்டாமல் இருங்க : அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல்

V. Senthil Balaji BJP K. Annamalai
By Irumporai Jan 18, 2023 03:44 AM GMT
Report

திருச்சி விமான நிலையைத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணிக்கையில் 2 தேசிய கட்சி பிரமுகர்கள் அவசரகால கதவை திறந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது மேலும், விமானம் புறப்படும் நேரமும் தாமதமானது.

விசாரணை 

இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது விமானத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை குறிப்பிடும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை விமர்சித்துள்ளார்.

சும்மா உருட்டாமல் இருங்க : அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் | Minister Senthil Balaji Criticized On Twitter

அமைச்சர் விமர்சனம்

2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று அதனை விமான போக்குவரத்து அமைச்சகம் (DGCA) விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ‘

வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.