‘’முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பான்னு கூப்பிடலாம் ‘’ - அமைச்சர் சேகர்பாபு கிண்டல்

annamalai ministersekarbabu
By Irumporai Nov 29, 2021 10:27 AM GMT
Report

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறிய அந்த கட்சி தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை :  தமிழகத்தில் 2026ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி என்று தெரிவித்தார். 

இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம், அண்ணாமலை இவ்வாறு கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, எந்த அண்ணாமலை என்று நிருபர்களிடம் பதில் கேள்வியெழுப்பிய சேகர்பாபு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று நிருபர்கள் மீண்டும் தெரிவித்தனர்.

இதையடுத்து பதிலளித்த சேகர்பாபு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன்பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம் என்று தெரிவித்தார். அதாவது அப்படி ஒன்று நடந்தால் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று கிண்டலாக தெரிவித்தார்.