எல்லாமே தெரிந்தது போல பேசி சர்ச்சை தான் - ஆளுநர் பதிவு - அமைச்சர் ரகுபதி சாடல்

M K Stalin Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Karthick Jan 16, 2024 05:04 PM GMT
Report

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆளுநர் பதிவு

காவி நிற துணியில் இருப்பது போல திருவள்ளுவரை சித்தரித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வாழ்த்து பதிவினை வெளியிட்டு இருந்தார்.

minister-ragupathi-slams-governor-in-thiruvalluvar

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த விஷயத்தில் தனது கருத்தை சமூகவலைத்தள பதிவிட்டு, வள்ளுவரை யாரும் கறைபடுத்திட முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தான் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த சர்ச்சை குறித்த பதிவை வெளியிட்டு ஆளுநரை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவு வருமாறு. 

வாடிக்கை

“தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாடிக்கை. வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார்.

minister-ragupathi-slams-governor-in-thiruvalluvar

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடுபெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து,எட்டுத்திக்கும் உள்ள தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்குத் தலைபணிந்து,‘இது தமிழ்நாடு தான்’ என்று ஒப்புக்கொண்ட ஆளுநர்.

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி!

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி!

ஆளுநர் இந்தாண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் மாண்புமிகு ஆளுநர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார்.   

ஏதோ பாரம்பர்யமாம்!?, அதுதான் ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பர்யம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆளுநர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம், காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.