மத்திய அரசு ஒழுங்காக வருவாய் தந்தால் டாஸ்மாக்கை இழுத்து மூடிவிடலாம் - அமைச்சர் அதிரடி!
minister
byte
ptr palanivel thiyagarajan
By Anupriyamkumaresan
மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் இன்று வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், டாஸ்மாக்கில் இருந்து 35 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்றும் அதை வைத்து தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருக்கிறது என அண்டை மாநிலத்தவர் நகையாடுகிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசால், எங்களுக்கு வர வேண்டிய 80 ஆயிரம் கோடி ஒழுங்காக வந்தால், டாஸ்மாக்கில் இருந்து 35 ஆயிரம் கோடி எதற்கு தேவை என கேள்வி எழுப்பியுள்ளார்.
