மாணவர்களுக்கு குட்நியூஸ் சென்ன அமைச்சர் பொன்முடி : என்ன செய்தி தெரியுமா?

examination announced ministerponmudi
By Irumporai Jan 10, 2022 07:31 AM GMT
Report

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும்,கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பின்னர் தேர்வுகள் நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும்,எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

எனவே,விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து மாணவர்கள் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும்.அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் மேலும், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.