சாலைகளை சீரமைக்கும் வரை செருப்பு போடமாட்டேன் - சபதம் எடுத்த பாஜக அமைச்சர்
சாலைகளை சீரமைக்கும் வரை காலில் செருப்பு போடமாட்டேன் என பாஜக அமைச்சர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதுமான் சிங் தோமர்
மத்திய பிரதேசம், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு குவாலியர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரதுமான் சிங் தோமர். எரிசக்தி துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில், அந்த தொகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அங்கு சாலைகள் மோசமான நிலையில் இருந்துள்ளார். தொடர்ந்து மக்கள், அவரிடம் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அப்போது கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
சாலை சீரமைப்பு
மேலும், இதுகுறித்து பிரதுமான் சிங் தோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெறுங்காலுடன் நடக்கும்போது மற்றவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் டிரீட் செய்ய முடியும் என்பதால் பாதணிகளை தியாகம் செய்துள்ளேன்.
குவாலியர் சட்டப்பேரவை தொகுதியின் சாலைகளின் நிலைமையை மேம்படுத்தாவிட்டால், நான் செருப்பு மற்றும் ஷூ அணிய மாட்டேன். நான் வெறுங்காலுடன் இருப்பேன். விரைவில் பணிகள் நடைபெறுவதை தினமும் கண்காணித்து வருவேன்.
இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து நடந்து செல்லக்கூடிய வகையில் அமைக்க, அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.