திடீர் உடல்நல குறைவு..அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவமனையில் அனுமதி
திடீரென மயக்கம் ஏற்பட்ட காரணத்தால் அமைச்சர் மா.சுப்ரமணியன், கிண்டி கருணநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
தனது வீட்டில் காலை மக்களை சந்தித்துக்கொண்டிருந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்ட காரணத்தால், தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை கிண்டியில் அமைந்துள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திமுகவை சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில வாரங்கள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போது, தற்போது புழல் சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.