மெட்ராஸ் ஐ: பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் - அமைச்சர்

Eye Problems Tamil nadu Ma. Subramanian
By Sumathi Nov 21, 2022 07:33 AM GMT
Report

கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் முடிந்தவரை தனிமைப்படுத்தி கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மெட்ராஸ் ஐ

சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

மெட்ராஸ் ஐ: பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் - அமைச்சர் | Minister Ma Subramanian Inform About Madras Eye

சென்னையை பொறுத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் இருக்கிறது. தினமும் 4000 முதல் 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

 கவனம்

இந்த 1.50 லட்சம் பேரில் யாருக்கும் பார்வை இழப்பு என்ற பாதிப்பு இல்லை. ண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறி ஆகும்.

குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும். சுய சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. முறையாக கண் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையினை பெற்று சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.