அதிகரிக்கும் கொரோனா .. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு - அமைச்சர் சொன்ன தகவல் என்ன?

COVID-19 Ma. Subramanian
By Irumporai Apr 01, 2023 12:01 PM GMT
Report

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா 

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேரு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் வரும் நபர்களுக்கு கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என அமலில் உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா .. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு - அமைச்சர் சொன்ன தகவல் என்ன? | Minister M Subramanians Explanation Lock Down

ஊரடங்கு உண்டா

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

அதாவது, கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தி என்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை எனவும்அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.