“அவன் ஒரு தலைவரு..அவன பத்தி பேசுறியே நீ” - அண்ணாமலையை தாக்கி பேசிய அமைச்சர்
அவனெல்லாம் ஒரு தலைவனா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒசூர் அருகே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒருமையில் பேசி விமர்சித்திருக்கிறார் அமைச்சர் காந்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று உதவிகளை வழங்கினார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் நடவடிக்கை பழிவாங்கும் செயலா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, மேற்கொண்ட செயல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே, இது நடைமுறையான செயல்தான்” என கூறினார்.
கருத்து சுதந்திரம் திமுக ஆட்சியில் தடுக்கப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, “அவனெல்லாம் ஒரு தலைவனா அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா?? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன் படித்தவனை போல பேச வேண்டாமென பதவி என்பது சில காலம் தான்,
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான்” என விமர்சித்த அவர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
முடிந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் புண்ப்படாத வகையிலேயே நடந்துக்கொள்கிறார் அனைவருக்குமான நல்லாட்சி, மக்களாட்சியை அவர் வழங்கி வருவதாக பேசினார்.