ஐஸ்வர்யா ராய் மாதிரி கண்ணு வேணுமா..அப்ப மீன் சாப்பிடுங்க...பாஜக அமைச்சரின் அட்வைஸ்..!
மீன் இறைச்சி தினமும் சாப்பிட்டால் பிறரை கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா ராயை போன்ற கண்களை பெறுவீர்கள் என்று மகாராஷ்ட்ரா பாஜக அமைச்சர் விஜய்குமார் காவித் பேசினார்.
பாஜக அமைச்சரின் அட்வைஸ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய்குமார் காவித். இவர் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தூர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது மக்களிடையே பேசிய விஜய்குமார் காவித் "மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என மாமிச வகைகளை சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது என கூறப்படும் வந்தாலும், மீன் அப்படி அல்ல என குறிப்பிட்டு, மீன் இறைச்சியில் கொழுப்பு கிடையாது என்பதால் அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என கூறினார்.
ஐஸ்வர்யா ராய் போல கண்
தொடர்ந்து பேசிய அவர், பிறரை கவர வேண்டுமானாலும் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும் என்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் தினமும் மீன் சாப்பிடும் காரணத்தால் தான் அவரது கண்கள் அத்தனை கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கின்றன என தெரிவித்தார். மேலும், மீன் சாப்பிட்டால் மக்களும் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்கள் பெறுவார்கள் என கூறினார். இவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் விஜய்குமார் காவித்தின் இந்த கருதும் மிகவும் வைரலான நிலையில், இதற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது.