தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் உயர்கிறது பால் விலை!

Puducherry
By Thahir Dec 27, 2022 10:28 AM GMT
Report

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயரும் பால் விலை 

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான “பாண்லே” மூலம் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Milk prices are rising in Puducherry too

சலுகை விலையுடன் தரமாக கிடைப்பதால் இந்த பால் பொருட்களுக்கு அம்மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வரும் ஒரு லிட்டர் பால் விலை, ரூ. 4 உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.