குடியிருப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து - 40 பேர் உயிரிழப்பு

Mexico Death
By Thahir Mar 29, 2023 09:29 AM GMT
Report

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் தங்கி இருந்த குடியிருப்பு மையத்தில் ஏற்பட்ட பங்கர தீ விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பயங்கர தீ விபத்து 

மெக்சிகோவில் உள்ள சியுடாட் ஜூவாரெஜ் நகரில் புலம்பெயர்ந்தோர் தங்குவதற்காக குடியிருப்பு மையம் ஒன்று உள்ளது. அந்த புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு மையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து - 40 பேர் உயிரிழப்பு | Mexico Migrants Fire Accident

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

இந்த தீ விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும். இந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மெக்சிகோ அரசு விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.