செம்மையா ..மாஸா .. 30 நம்பர் டீசர்ட் அணிந்து பிஎஸ்ஜி அணியுடன் இணைந்தார் லயோனல் மெஸ்சி !
பார்சிலோனா அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடிய லயோனல் மெஸ்சி, அந்த கிளப்பில் இருந்து வெளியேறி தற்போது பிஎஸ்ஜி கிளப்பில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து போட்டியில் தனக்கென ஒரு பாதை அமைத்து உலகம் முழுவது ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர்தான் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி .
இவர் ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஒரே கிளப்பிற்கான அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்த மெஸ்சி நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை தொடர்பாக மெஸ்சியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியவில்லை என பார்சிலோனா அணி அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறினார் மெஸ்சியின் இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 34 வயதான மெஸ்சி, இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவலை பிஎஸ்ஜி-யிடம் இன்று பெற்றுள்ளார்.
இதனால் பிரான்சின் தலைசிறந்த கிளப் அணியான பிஎஸ்ஜி (பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன்) அணியுடன் இரண்டு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்யப்படுள்ளார் லயோனல் மெஸ்சி.
இந்த அறிவிப்பினை பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
A new ? in Paris !
— Paris Saint-Germain (@PSG_inside) August 10, 2021
PSGxMESSI ❤️? pic.twitter.com/2JpYSRtpCy
இந்த நிலையில் தற்போது அவர் பாரிஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் Messi in PSG என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்