சனி, புதனின் தாக்கம்; ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள் - தப்பிக்க வாய்ப்பில்லை!
3 ராசியினரின் தொழில் வாழ்க்கையில் கடும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜூன் 22, 2025 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், வரும் ஆகஸ்ட் 30, 2025 வரையில் கடக ராசியில் நீடிக்கிறார். ஜூலை 18 அன்று வக்ர நிலையில் பின்னோக்கி நகர்கிறார். ஆகஸ்ட் 11 வரையில் நீடிக்கும் இந்த வக்ர பெயர்ச்சி, ஒரு சில ராசிக்கு எதிர்மறை பலன்களை அளிக்கவுள்ளது.
இதில் குறிப்பாக ஏழரை சனி காலத்தில் இருக்கும் சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு கூடுதல் சிரமங்களை உண்டாக்குவார். இந்நிலையில், புதன் மற்றும் சனி கிரகத்தின் தாக்கம் யாருக்கு பாதகமான சூழலை உண்டாக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
கும்பம்
தொழில் போட்டியை அதிகரித்து, தொழில் வளர்ச்சியை கடினமாக்குகிறது. வியாபாரத்தில் நஷ்டம், முதலீடுகளில் போதுமான லாபம் இன்மை போன்ற சிக்கல்களுடன், தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவருடன் வாக்குவாதங்கள், சண்டை - சச்சரவுகள் ஏற்படக் கூடும். மருத்துவ செலவுக்காக மருத்துமனைக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
சிம்மம்
ஆழ்ந்த சிந்தனைக்கு பின் செய்யப்பட்ட முதலீடுகள், நஷ்டத்தை கொண்டு வரும். எனவே முக்கிய முடிவுகளை எடுக்கையில் ஒன்றுக்கு பல முறை சிந்திப்பது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு அழுத்தம் உண்டாக்கலாம். குடும்ப உறவிலும் பிரச்சனை நீடிக்கும், பெற்றோர் ஆதரவு குறையும், கணவன் - மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
தனுசு
பணியிடத்தில் உங்கள் திட்டங்கள், சிந்தனைகள் பலனளிக்காது, வியாபாரத்தில் உண்டாகும் நஷ்டம் உங்களை மன கவலையில் மூழ்கடிக்கும். தூக்கமின்மை மட்டும் இன்றி, மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். வாகனத்தை இயக்குகையில் சற்று கவனமாக இருப்பது நல்லது.