பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீன்குமார் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.
பாரா ஒலிம்பிக் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியா இது வரை 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை பெற்றிருந்த்து இந்த நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆடவருக்கான T64 உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Praveen Kumar jumps 2.07m in Men’s High Jump T64 to bag #Silver medal for Flag of India....
— PIB in MP (@PIBBhopal) September 3, 2021
India's 6th Silver Second place medal medal and total tally of 11 medals so far in #Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/nIeRHkrzpw
18 வயது நிரம்பிய பிரவீன்குமார் 2.07 மீ உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை தன் வசமாக்கினார். இதன் மூலம் 11 பதங்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளது
முன்னதாக இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் ஒரே நாளில் வென்றுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.