மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏனோ தானோவென சும்மா இருக்காது - அமைச்சர் துரைமுருகன்

Tamil nadu Government of Tamil Nadu Durai Murugan Karnataka
By Thahir Aug 04, 2023 03:23 AM GMT
Report

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏனோ தானோவென சும்மா இருக்காது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம்  

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Mekedatu Dam Issue - TN Government will not be idle

அந்த வகையில், மேகதாவில் அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கான ஆய்வை கர்நாடகா அரசு நிறைவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது.

மேலும், வானிலை சாதகமாக இருந்தால் 60 நாளில் கணக்கெடுப்பு பணி முடியும் என்றும் கர்நாடகா – தமிழக இடையே எல்லையை குறிக்க 20 மீட்டருக்கு ஒரு மர துண்டுகளை கர்நாடக வனத்துறை நட்டு வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சும்மா இருக்காது

இதற்கிடையில், வரும் 22 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில், மேகதாது அணைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,

Mekedatu Dam Issue - TN Government will not be idle

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏனோ தானோவென சும்மா இருக்காது; இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஆய்வு பணிகள் முடிந்தால் மட்டுமே கர்நாடகாவில் அணையை கட்டிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.