‘’ பிரதமர் திமிர் பிடித்தவர் ’’ - பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர்

governor pmmodi meghalaya
By Irumporai Jan 03, 2022 07:13 AM GMT
Report

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்ற மேகாலயா மாநில ஆளுநர் "மோடி மிகவும் திமிர் பிடித்தவர்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து, ஹரியானாவில் உள்ள தாத்ரியில் ஒரு விழாவில் பேசிய  மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்: 

பிரதமர் மோடி திமிராக இருப்பதாக கூறினார் , மேலும் விவசாயிகள்  போராட்டத்தில் 500 விவசாயிகளுக்கும் மேல் இறந்துள்ளனர் என்று பிரதமரிடம்  கூறியபோது, 'அவர்கள் என்னாலா செத்தார்கள்?' என்று கேட்டார்.

‘’ பிரதமர் திமிர் பிடித்தவர் ’’ -  பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர் | Meghalaya Governor Meets Pm Modi

அதற்கு நான் 'ஆமாம், நீங்கள் பிரதமராக இருப்பதால் தான் இறந்தார்கள்' என்றேன். பின்னர் அது வாக்குவாதத்தில் முடிந்தது. அதன் பிறகு என்னை அவர் அமித்ஷாவை சென்று பார்க்க சொன்னதாக கூறினார்.

மேலும், விவசாயிகள் போராட்டம் ,முற்றிலும் ஓய்ந்தது என்று அரசாங்கம் எண்ண வேண்டாம், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான், ஏதாவது சிறு விஷயம் தவறாக நிகழ்ந்தால் கூட மீண்டும் போராட்டம் சூடு பிடிக்கும்.என்று மாலிக்  கூறினார்.