மீராபாய் வெள்ளிப் பதக்கம் வெல்ல காரணம் லாரி ஓட்டுநர்களா? - அதிர்ச்சி தகவல்

silver medal tokyo olympics 2020 meerabai sanu
By Petchi Avudaiappan Aug 06, 2021 06:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு லாரி ஓட்டுநர்கள் 150 பேரை நேரில் வரவழைத்து அவர்களுக்கு உணவு மற்றும் பரிசுகள் வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் பளுதூக்கும் போட்டியில் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மீராபாய் சானு மகளிர் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். வருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மீராபாய் வெள்ளிப் பதக்கம் வெல்ல காரணம் லாரி ஓட்டுநர்களா? - அதிர்ச்சி தகவல் | Meerabai Chanu Treat Lorry Driver After Won Medal

இம்பாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மீராபாய் சானு தினமும் இம்பாலுக்கு பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால் அவ்வழியாக செல்லும் மணல் லாரிகளில் லிப்ட் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

அதுதான் அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவுக்கு அடிப்படையாக அமைந்தது என்று சொல்லலாம். இந்நிலையில் தனக்கு உதவிய சுமார் 150 லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மீராபாய் அவர்களுக்கு உணவு மற்றும் பரிசுகள் வழங்கி அசத்தியுள்ளார்.