தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை - கதறி அழுத மீரா மிதுன்!

Meera Mitun
By Thahir Jun 02, 2022 10:51 AM GMT
Report

தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என நடிகை மீரா மிதுன் கதறி அழுதுள்ளார்.

பிரபல மாடலும் நடிகையுமான மீரா மிதுன் சமீப காலமாக பிக்பாஸ் பிரபலங்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை - கதறி அழுத மீரா மிதுன்! | Meera Mitun Crying On Latest Video

இதனால் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து, பட்டியலின மக்கள் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். கடந்த சில நாட்களாக மீரா மிதுன் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு கதறலுடன் பேட்டியளித்துள்ளார்.

அதில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் அதிகமாகி, அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்கொலை எண்ணம் வர காரணம் இந்த சமுதாயம்தான்.

இந்த சமுதாயம் தன்னை வாழ விடவில்லை என்றும் மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார். எத்தனை முறை ஜெயிலுக்கு போவது, தற்போது கோர்ட்டுக்கு சென்று கையெழுத்து போடக்கூட தன்னிடம் காசு இல்லை, வழக்கறிஞருக்கு கொடுக்கக்கூட பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை - கதறி அழுத மீரா மிதுன்! | Meera Mitun Crying On Latest Video

தன்னை வீட்டில் சேர்த்துகொள்வதில்லை, தனக்கு தங்குவதற்கு வீடு சாப்பிட சாப்பாடு கூட இல்லை என்றும் அழுதுள்ளார்.

இந்தியாவுக்காகவும், தமிழ் நாட்டுக்காகவும் பல சாதனைகளை படைத்த தனக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கேட்டுள்ள மீரா மிதுன் தான் இறந்த பிறகு தன் சாதனை வெளியே வரும் என்றும் விரக்தியாக கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற தன்னை தனது குடும்பத்தினர் காப்பாற்றி விட்டதாகவும், கடந்த 9 மாதங்களாக கோர்ட், கேஸ், ஜெயில் என அலைந்து கொண்டிருப்பதாகவும், தான் எழுந்து நிற்க நிற்க தன்னை அடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் சந்தித்த பிரச்சனைகளை வேறு யாராவது சந்தித்தால் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருப்பார்களா என்று தெரியவில்லை என்றும் கண்ணீர் விட்டுள்ளார் மீரா மிதுன்.