நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு...!

Meera Mitun
By Nandhini Nov 14, 2022 12:18 PM GMT
Report

தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் நடிகை மீரா மிதுன், மாடலிங் மற்றும் அழகுப் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

ரியாலிட்டி ஷோ-வான 'ஜோடி நம்பர் ஒன்', சீசன் 8-ல் கலந்துக்கொண்டார். பிறகு, 'பிக் பாஸ் சீசன் 3' ல் கலந்துக் கொண்டார். 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்குப் பிறகு மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

மீரா மிதுன் கைது

அதில் சூர்யா, ஜோதிகா, விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மீது சமூக வலைதளங்களில் வார்த்தை தாக்குதல் நடத்தினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதைத்தொடர்ந்து இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மீரா மிதுன் தலைமறைவு

இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாமல் வருவதால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், மீராமிதுன் ஆஜராகவில்லை. ஆனால், அவரது நண்பர் சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார்.

meera-mitun-central-crime-branch

மிரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாளை லுக்-அவுட் கொடுக்க இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மீராமிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் ஷியாமளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.