நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்..!

ArrestWarrant MeeraMitun JudgeOrder TamilActress
By Thahir Mar 23, 2022 05:01 PM GMT
Report

பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதுாறாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்..! | Meera Mitun Arrest Warrant

புகாரை பெற்ற போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இதையடுத்து வழக்கில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் நடிகை மீரா மிதுன்.

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதிகள் முன்பு விசாணைக்கு வந்தது.விசாரணையில் மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நிதிபதி உத்தரவிட்டார்.

மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.