மீரா மிதுன் ஆண் நண்பர் அபிஷேக் ஷியாம் அதிரடி கைது

Actor Arrest Meera Mithun abhishek
By Thahir Aug 15, 2021 09:17 AM GMT
Report

மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நடிகை மீராமிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மீரா மிதுன் ஆண் நண்பர் அபிஷேக் ஷியாம் அதிரடி  கைது | Meera Mitun Actor Friend Arrest

இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், மீராமிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கான விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அன்றைய தினமே, தன்னை யாராலும் கைது செய்ய முடியாது. அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப்போல் நானும் இருப்பேன் என பேசி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தலைமறைவாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் மீராமிதுன் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்தது குறித்து, சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர விடுதிக்குச் சென்று மீராமிதுனை கைது செய்தனர் இதை அடுத்து சென்னை அழைத்து வந்தனர் போலீசார்

மீரா மிதுன், 'தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும்' சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆனால், மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என்ற வாக்குவாதத்தால் முதல் தளம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது.

தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீரா மிதுன், 'தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும்' சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என்ற வாக்குவாதத்தால் முதல் தளம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது.

மீரா மிதுன் ஆண் நண்பர் அபிஷேக் ஷியாம் அதிரடி  கைது | Meera Mitun Actor Friend Arrest

தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.