விரைவில் பறிக்கப்பட்டீர்கள்..திருமண நாளில் மீனாவின் உருக்கமான பதிவு!
கணவர் இல்லாமல் வந்த முதல் திருமண நாள் என்பதால், மீனா மிகவும் உருக்கமாக ஒரு பதிவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.
மீனா
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த ஜூன் 29ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த ஜனவரி மாதம் முதல், நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை இருந்தார்.
புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்தால், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு அவர் காத்திருந்த நிலையில், அவருக்கான நுரையீரல் கிடைக்கும் முன்பே, சிகிச்சையிலிருந்த அவர் உயிரிழந்தார்.
கணவருக்கு அஞ்சலி
நடிகை மீனாவிற்கு ஏற்பட்ட இந்த இழப்பு, இந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் அல்லாது ரசிகர்களுக்கும் வேதனை அளித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள், நேரில் வந்து மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பலரும் போனில் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நடிகை மீனா-வித்யாசகர் தம்பதியின் திருமண நாளாகும். கணவர் இல்லாமல் வந்த முதல் திருமண நாள் என்பதால், மீனா மிகவும் உருக்கமாக ஒரு பதிவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
திருமண நாள்
அதில், ‛நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள், ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள்.
அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
பிரபலங்கள் ஆறுதல்
எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்புடனும் அக்கறையுடனும் ஆதரவுடனும் எங்களை கொண்டாடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அன்பை உணர்கிறோம்.’என்று பதிவு செய்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் பதில் அளித்து, அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.