இதை செஞ்சுதான் ஆகனும்.. கணவர் இறப்பிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த மீனா!
மீனா, கணவர் இறப்பிற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.
கணவர் இறப்பு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீண்டும் நடிப்பில்..
இந்நிலையில், நடிகை மீனா விளம்பர படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவர் மீண்டும் நடிப்பில் களமிறங்கியதால் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மீனா 2வது திருமணம் செய்யப்போவதாக தகவல் பரவி வந்தது. அதற்கு அவர், இப்போது என் கவனம் முழுவதும் என் மகளின் வாழக்கையிலும், நடிப்பின் மீது மட்டுமே உள்ளது. இது போன்று ஆதாரம் இல்லாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.