நடிகை மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா...கண் கலங்கிய கலா மாஸ்டர்

Meena Tamil Cinema
By Thahir Sep 03, 2022 06:35 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா பல திரைப்படங்களில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார்.

மீனா கணவர் உயிரிழப்பு 

தற்போது நடிகை மீனா குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா கடந்த தீபாவளியன்று வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் மீனா கணவர் உயிரிழந்தார் இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவரின் மரணம் நடிகை மீனாவை நிலைகுலைய வைத்த நிலையில் தனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மெல்ல மெல்லமாக மீண்டு வருகிறார் மீனா.

கண் கலங்கிய கலா 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தனது உடலை தானம் செய்வதாக மீனா அறிவித்தார். இந்த நிலையில் நடிகை மீனாவின் நெருக்கிய தோழியான கலா மாஸ்டர் தனது 18வது திருமண நாளை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்.

Meena

தனது திருமண நாள் கொண்டத்திற்கு நடிகை மீனாவுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். ஆனால் நடிகை மீனா தான் ஊரில் என்று கூறியுள்ளார்.

இதனால் கலா மாஸ்டர் வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கலா மாஸ்டர் தனது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடி கொண்டிருந்த போது திடீரென நடிகை மீனா உள்ளே வீட்டின் உள்ளே சென்றார்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த மீனா 

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த கலா மாஸ்டர் கண் கலங்கினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்த கலா மாஸ்டர் .

Meena

நேற்று மீனா அவள் ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னாள், எங்கள் சிறப்பு நாளில் அவளால் என்னுடன் இருக்க முடியவில்லை என்று நான் வருத்தப்பட்டேன், ஆனால் திடீரென்று அவள் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினாள்.லவ் யூ மீனா என பதிவிட்டுள்ளார்.