Me Too புகார் கொடுத்ததால் என்னை கொலை செய்ய முயற்சி செய்தாங்க... - பிரபல நடிகை பரபரப்பு புகார்
மீடூ குறித்து புகார் சொன்னதால் என்னை பல முறை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக விஷால் பட பிரபல நடிகை கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தனுஸ்ரீ தத்தா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா, வில்லன் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பாலிவுட் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கு முடிக்கப்பட்டது. இருந்தாலும், தொடர்ந்து அது குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய ஒரு சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார் தனுஸ்ரீ.
அப்பேட்டியில் அவர் பேசுகையில் -
நான் மீடூ புகார் சொன்ன பிறகு, என்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்தது. நான் காரில் செல்லும்போது, என் காரின் பிரேக் சேதமடைந்திருந்தது.
நான் உஜ்ஜயினியில் உள்ள கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றபோது, பிரேக் செயலிழந்ததால் விபத்தில் சிக்கினேன். எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தது. நான் மீடூ புகார் சொன்ன பிறகு, எனக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.
இதற்கு காரணம் நானே படேகர் தான் என்று வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், மீண்டும் நானே படேகருக்கும், தனுஸ்ரீக்கும் இடையே மீண்டும் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.