" என் உதட்டை கடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்" - பிரபல மலையாள நடிகர் மீது இளம்பெண் மீ-டூ புகார் ; அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம், லூசிபர் ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், உள்பட பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் மீது இளம்பெண் ஒருவர் மீ டூ புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த இளம்பெண் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சிறுவயதில் இருந்தே எனக்கு கலை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. குறிப்பாக மோனோ ஆக்ட், எலொக்யூஷனில் நல்ல ஆர்வம். என் திறமையை நன்கு அறிந்த எனது பெற்றோர் நான் மோனோ ஆக்ட்டை முறைப்படி கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.
பெரிய இடத்து பிள்ளைகளுக்கு அனீஷ் ஜி மேனன் மோனோ ஆக்ட் சொல்லிகொடுத்து வந்த நிலையில், பல குழந்தைகளுக்கு அவர் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்து வந்தார்.
அவரிடம் சேர்த்து என்னையும் தொழில் ரீதியாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து எனது பெற்றோர் அனீஷை அணுகினார்கள். அந்த ஆண்டு மோனோ-ஆக்ட் கற்றுக்கொடுக்க தயார் என அனீஷ் மேனன் கூறியதால் பயிற்சி வகுப்புக்கு சென்றேன்.
பயிற்சிக்கு சேர்ந்த அன்று முதல் அவர் என்னிடமும் நல்ல அன்பு காட்டுவார், என் கன்னங்களை அன்பாக தடவுவார். பின்னர் அவர் என் மீதும் என் உடல் மீதும் அதிக சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததை நான் உணர்ந்தேன்.
பொசிஷன் திருத்தம், தோரணை அழகு என்று சொல்லி என் உடல் உறுப்புகளை தொட ஆரம்பித்தார். இதை பற்றி பல முறை என் பெற்றோரிடம் நான் கூறியிருக்கிறேன் ஆனால் உடலை தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று எனது பெற்றோரையும் அனீஷ் நம்ப வைத்து அவர்களை தவறாக வழிநடத்தினார்.
அதன்பிறகு என் பெற்றோரிடம் இதைப்பற்றி கூறும்போது அவர்கள் இதெல்லாம் பயிற்சியின் ஒரு பகுதி, நீ இதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் உனக்கு எல்லாம் தவறாக தெரிகிறது என கூறி என்னை அனீஷுடன் தனியாக மோனோ ஆக்ட் கற்றுக்கொள்ள விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
ஒரு கட்டத்தில் என் பார்பகங்களின் பொசிஷன் சரி செய்ய வேண்டும் என கூறிய அனீஷ் என் ஆடைக்குள் தனது கையை நுழைத்து என் மார்பகங்களை அழுத்தினார். வலியால் துடித்த என்னை, சுவரில் தள்ளி, என் கைகளை இறுக்கிப்பிடித்து, முத்தமிட்டு என் உதட்டை கடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
எனக்கு அழுகையும் பயமும் வந்து நான் கூச்சலிட்டு கத்தி அழுதேன். பின்பு பெற்றோரிடம் சென்று நடிப்பு பயிற்சி வேண்டாம் என்று கூறி விட்டேன்.
என்னைப்போல் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். வீட்டில் எனக்கு வேண்டிய ஆதரவு கூட கிடைக்காமல் இதை யாரிடம் சொல்வது? எனவே இதை யாருடனும் பகிர்ந்து கொள்ள பல ஆண்டுகள் ஆனது.
அவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்ர சிறுமிகளும் இருக்கலாம். என்னைப் போல் ஒருவர் வெளிப்படையாகப் பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வந்துவிடும் என்பது என் நம்பிக்கை” என அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.