48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுக பொதுக்குழு - 2 புதிய அணிகள் உருவாக்கம்

M K Stalin DMK Madurai
By Karthikraja Jun 01, 2025 05:19 AM GMT
Report

 திமுக பொதுக்குழு

மதுரை மாவட்டம் உத்தங்குடியில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

மதுரை திமுக பொதுக்குழு

1977ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது 48 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக, நேற்றே மதுரை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 25 கிமீ ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மதுரை திமுக பொதுக்குழு

இந்த பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் என 10000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக 24 வகையான சைவம், 24 வகையான அசைவ உணவுகள் தயாராகி வருகிறது.

2 புதிய அணிகள்

பொதுக்குழு மேடையில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மதுரை திமுக பொதுக்குழு

அதைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், பகல்ஹாம் தாக்குதலில் இறந்தோர் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து திமுகவில் 2 புதிய சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணியும், கல்வியாளர்கள் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

திமுகவில் ஏற்கனவே 23 சார்பும் அணிகள் உள்ள நிலையில், தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.