தற்கொலைக்கு முயன்ற எம்பி கணேசமூர்த்தி காலமானார்; பதறும் மதிமுகவினர் - யார் இவர்?

Vaiko Erode
By Sumathi Mar 28, 2024 02:59 AM GMT
Report

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.

எம்பி கணேசமூர்த்தி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர் கணேச மூர்த்தி. மதிமுகவின் பொருளாளராகவும் பணியாற்றி வந்தார். 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

ganesha moorthy mp

அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், திடீரென அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார். சிகிச்சையில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எம்பி கணேசமூர்த்தி விபரீத முயற்சி; கெடு வைத்த டாக்டர்ஸ் - துரை வைகோ உருக்கம்!

எம்பி கணேசமூர்த்தி விபரீத முயற்சி; கெடு வைத்த டாக்டர்ஸ் - துரை வைகோ உருக்கம்!

மாரடைப்பால் மரணம்

இவரது மறைவு மதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

தற்கொலைக்கு முயன்ற எம்பி கணேசமூர்த்தி காலமானார்; பதறும் மதிமுகவினர் - யார் இவர்? | Mdmk Erode Mp Ganesha Moorthy Passed Away

இந்த நிலையில் வரும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் ஈரோடு எம்பி கணேச மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மரணத்திற்கும், எம்பி சீட் வழங்காததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.