மே 1 - முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை- பள்ளி கல்வித்துறை

covid19 school tamilnadu
By Irumporai Apr 28, 2021 10:45 AM GMT
Irumporai

Irumporai

in கல்வி
Report

மே 1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தன் காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

அதே சமயம் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மே 1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் தனது அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே கற்பிக்கலாம் எனவும் மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.