தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம்.. தமிழக அரசு உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் மே 31ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உத்தரவுப்படி, கொரோனா ஊராடங்கை முன்னிட்டு, மின்கட்டணம் செலுத்த கால
— DMK (@arivalayam) May 10, 2021
அவகாசத்தை நீட்டித்தும் - ஏப்ரல் & மே மாதங்களுக்கான மின் கட்டணத்தை மறுசீரமைத்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு'#DMK #TNEB pic.twitter.com/nak8NzZYk7