அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் மே மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5,742 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 எனவும் விற்பனையாகிறது.