தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை இன்று முதல் உயர்வு : எவ்வுளவு தெரியுமா?
தீப்பெட்டி விற்பனை விலையானது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாற்றம் இல்லாமல் ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வந்தது.
தற்போது அதன் மூலப் பொருட்களின் விலை , மின்சார கட்டணம் ,லாரி வாடகை உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்தது.
அதன்படி அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இதில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 50 குச்சுகள் கொண்ட தீப்பெட்டியை ரூபாய் 2க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் விலை உயர்வு அமலாகியுள்ளது.