சர்ச்சையை கிளப்பிய மேரிகோம் தோல்வி - கடும் விமர்சனம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தோல்வி பல்வேறுசர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலம்வாய்ந்த கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவுடன் மேரிகோம் மோதினார்.முதல் சுற்றில் 4 - 1 என்ற கணக்கில் மேரி கோம் பின்தங்க, 2வது மற்றும் 3வது சுற்றை 3-2 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார்.
ஆனால் முதல் சுற்றை கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் வெலன்சியா 4-1 என்ற கணக்கில் வென்றதால் 2 சுற்றுகளை வென்றாலும் மேரிகோம் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய மேரிகோம் பயிற்சியாளர் லால் தேவ், 'இந்த scoring முறை தனக்கு புரியவில்லை என்றும், இதனால் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மேரிகோம் இன்னமும் தொடர்ந்து என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் மேரிகோம் போட்டியின் ஸ்கோரிங் முறை கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.