நான் தோத்துட்டேன்னு நம்பமுடியல... என்னோட டிரஸ்ஸை மாற்ற சொன்னது ஏன்? மேரி கோம் கேள்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் நேற்று நடந்தன.
இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.
இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேரி கோம் தனது ட்விட்டர் பதிவில், நான் குத்துச்சண்டை வளையத்துக்குள் இருக்கும்போது மகிழ்ச்சியாகவே இருந்தேன்.
என்னை ஊக்க மருந்து பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது கூட நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.
எனது பயிற்சியாளர் என்னிடம் கூறியபோதுதான் நான் தோல்வியுற்றது தெரிந்தது என்றார்.
மேலும், காலிறுதியின் போட்டிக்கு போகும் முன்பு நான் அணிந்திருந்த ஆடைக்கு பதிலாக வேறு ஆடையை மாற்றுமாறு தெரிவித்தார்கள்.
இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பது குறித்து விளக்கம் வேண்டும்' என்றும் மோரி கோம் தெரிவித்துள்ளார்.