பிரம்மாண்டமாக நடந்த கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் திருமணம்..!
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் திருமணம் ஆக்ராவில் பிரம்மாண்டமாக நடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.
அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த 2021 ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஜெயாவும் காதலுக்கு பச்சை கொடி காட்டவே கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் சஹார் மற்றும் ஜெயா திருமணம் ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.
தனியார் சொகுசு விடுதியில் நடந்த திருமணத்தில் ராகுல் சஹார் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற உள்ளது.இதில் தோனி,விராட் கோலி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.