நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம்...எங்கு எப்படி நடக்க போகுது தெரியுமா?
நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது என நயன்தாரா,விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நிறைவடைந்த நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே இரண்டு வாரங்களில் இரண்டு முறை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் சென்று வந்தனர். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணம் குறித்து இடத்தை ஏற்பாடு செய்வதற்காகவே அவர்கள் திருப்பதி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவனும்,நயன்தாராவும் வரும் ஜுன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ரீங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்காக மடத்தை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வேகமாக பரவி வருகிறது.