15 பேரை திருமணம் செய்து முதலிரவு நடத்தி நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன பலே பெண் - அதிர வைக்கும் சம்பவம்

By Nandhini May 29, 2022 07:38 AM GMT
Report

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். நீண்ட காலமாகவே திருமணம் ஆகாத இவருக்கு பெண் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து, தினேஷ் என்பவர், எனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார பெண் இருப்பதாக கூறியுள்ளார். அவள் பெயர் பூஜா என்று கூறியுள்ளார்.

இதன் பின்பு, அந்தப் பெண்ணை பார்க்க சென்றார் பிரசாத். பூஜாவைப் பார்த்ததும் பிரசாத்துக்கு பிடித்து விட்டது. திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்தத் திருமணத்தில் ஊரே திரண்டு வந்து பிரசாத்தையும், பூஜாவையும் வாழ்த்தினர்.

திருமணம் முடிந்து 8 நாட்களானதும், திடீரென தினுஷ் பிரசாந்த்திற்கு போன் செய்து தனக்கும், என் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று கூறி உள்ளார். இதனால், பிரசாந்த் பூஜாவை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.. ஆனால், பிரசாந்த் வீட்டிற்கு போன பூஜா திரும்பி வரவே இல்லை. தினேஷூக்கும், பூஜாவுக்கும் போன்ற செய்தார் பிரசாந்த். போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சோகத்தில் வீட்டிற்கு வந்த பிரசாந்த் பீரோவை திறந்தார். ஆனால், பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளை எதுவும் இல்லை. அப்போதுதான் பிரசாந்த்திற்கு சந்தேகம் வந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் பிரசாந்த், பூஜா மீது புகார் கொடுத்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஒருவழியாக பூஜாவை கண்டுபிடித்து கைது செய்தனர். பூஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

போலீசாரிடம் பூஜா கொடுத்த வாக்குமூலத்தில் கூறுகையில்,

உண்மையில் என் பெயர் பூஜா கிடையாது சீமா கான். பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல. எனக்கு 15 திருமணம் நடந்துள்ளது. திருமணம் செய்து கொள்வது தான் என்னுடைய தொழில். 15 பேரை கல்யாணம் செய்து, 15 பேரிடமும் நகை, பணத்தை கொள்ளையடித்து ஓடிவிடுவேன். ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ், எனக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுப்பார் என்று வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, கிரைம் பிரிவு போலீசார், இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிர விசாரணையில், லூட்டரி துல்ஹான் என்ற கும்பலில் 15 க்கும் மேற்பட்டவ்ர்கள் இருப்பது தெரியவந்தது. இதில் 3 பெண்கள் உள்ப்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேர் தலைமறைவாக உள்ளனர். 

15 பேரை திருமணம் செய்து முதலிரவு நடத்தி நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன பலே பெண் - அதிர வைக்கும் சம்பவம் | Married To 15 People