இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் - நெகிழ்ச்சி சம்பவம்

Viral Photos
By Nandhini Jun 03, 2022 10:05 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் மூழ்கக்கூடாது என்பதற்காக, பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள்.

திருமணம் முடிந்து மகேஷ்வரியும், ஜெயராஜூம் செல்வராஜ் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். மணமகள் செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இதைப் பார்த்த திருமணத்திற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் கண்கலங்கி நெகிழ்ச்சி அடைந்தனர். 

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் - நெகிழ்ச்சி சம்பவம் | Marriage Viral Photo